சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்ததைத் தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சர்வதே சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்தியாவிலும் விலையைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. எண்ணெய் நிறுவங்கள் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்ததால் விலையைத் தற்பொழுது குறைக்கும் சாத்தியம் இல்லை என பெட்ரோலியத் துறை அமைச்சர் கூறி வந்தார்.
இதற்கிடையில் சர்வதேச சந்தையில் பேரலுக்குக் கச்சா எண்ணெயின் விலை 45 டாலரை விட குறைவான விலைக்குச் சரிந்ததைத் தொடர்ந்து இந்தியாவிலும் விலையைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பெட்ரோலிற்கு லிட்டருக்கு 5 ரூபாயும் டீசலுக்கு 2 ரூபாயும் குறைக்க முடிவாகியுள்ளது. இந்த விலைக்குறைவு உடனடியாக இன்று இரவு முதல் அமுலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.
அண்மைய செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக