பாக்தாதின் மையப் பகுதியில் அமைந்துள்ள பாப் அல் ஷர்கி எனப்படும் சந்தையில் 16 இராக்கிய பொதுமக்களை அமெரிக்கப் படையினர் கைது செய்து இரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். வரும் சனவரி 31ஆம் நாள் இராக்கில் மாகாண தேர்தல் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த புதன்கிழமை இராக்கின் தேர்தல் ஆணையத்தில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்த பாகிர் யாசின் அல் தமீமி என்ற அதிகாரியை அவரின் வீட்டுக்குள் சென்று அவரது குடும்பத்தார் முன்னிலையில் அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதற்கு அமெரிக்கப் படையினர் எந்தவித காரணமும் இதுவரைக் கூறவில்லை என்று கூறப்படுகிறது.
அண்மைய செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக