நேற்று முன்தினம் நேட்டோ படையினருக்கு உணவு மற்றும் ஆயுதங்கள் எடுத்துச் செல்வதற்குத் தயாராய் இருந்த 160 வாகனங்கள் மீது தாலிபான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் வாகனங்கள் எரிந்து நாசமடைந்தன. 3 பேர் பலியாயினர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் அவர்கள் நேட்டோ படையினரின் வாகனங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தினர். இதில் ஜீப்கள் உள்ளிட்ட நேட்டோ படையினரின் 100 வாகனங்கள் எரிக்கப் பட்டன. ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட முதல் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அண்மைய செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக